சைபர் பாதுகாப்பு வாரம் இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கணிணி அவசர அழைப்பு பிரிவு குறிப்பிடுகிறது.இந்த வாரத்தை முன்னிடடு கணிணி மற்றும் இணையம் தொடர்பில் தெளிவுபடுத்தும் செயற்றிட்டங்கள் சில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹன பல்லியகுரு தெரிவித்துள்ளார்.
தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் வாரம் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், தேசிய மட்டத்தில் சைபர் தொழிலுநுட்ப மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களை தெளிவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதனை முன்னிட்டு சைபர் பாதுகாப்பு தொடர்பான விசேட மாநாடொன்று கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும் ரோஹன பல்லியகுரு மேலும் தெரிவிக்கிறார்.
News: Manithan


0 comments:
Post a Comment